இலங்கை கடற்படை கப்பல்களான சாகர மற்றும் சுரனிமில இந்தியாவுக்கு விஜயம்
 

இலங்கை கடற்படைக்குச் சொந்தமான இரு கப்பல்கள் நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நேற்றய தினம் (ஒக்டோபர், 06) இந்தியா நோக்கி பயணமானது. இலங்கை கடற்படைக் கப்பல் சாகர மற்றும் சுரனிமல ஆகிய இரு கப்பல்களும் கடற்படை சம்பிரதாய பூர்வமான பிரயாண வழியனுப்புதல் நிகழ்வின் கொழும்பு துறைமுகத்தில் இருந்து இந்தியா நோக்கி பயணித்துள்ளது.

நான்கு நாட்களைக் கொண்ட இவ்வுத்தியோகபூர்வ விஜயத்தில் கடற்படை பயிற்சிகளும் உள்ளடங்குகின்றன. மேலும் இக்கப்பல்கள் எதிர்வரும் வியாழக்கிழமை (ஒக்டோபர்,11) தமது பயணத்தை நிறைவு செய்த பின்னர் தாயகம் நோக்கி திரும்வுள்ளன.