சீன கடற்படை கப்பல் இலங்கை வருகை
 

சீன இராணுவ கடற்படை கப்பல் “ஹாய் யாங்க்டாவ்” நான்கு நாள் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (ஒக்டோபர், 04) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

சுமார் 7,676 தொன்கள் எடையுடைய “ஹாய் யாங்க்டாவ்” எனும் கப்பல் 135மீட்டார் நீளம் மற்றும் 18.6 மீட்டார் அகலம் கொண்டதாகும்.

இலங்கையில் தரித்திருக்கும்வேளையில் இக்கப்பலிலுள்ள சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து விளையாட்டு நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுக்க உள்ளனர். அத்துடன் இக்கப்பல் இம்மாதம் (ஒக்டோபர்) 07ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்பட உள்ளது.