இந்திய கடற்படை கப்பல் ராஜ்புட் இலங்கை வருகை
 

இந்திய கடற்படை கப்பல் “ஐஎன்எஸ் ராஜ்புட்” இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று (ஒக்டோபர், 11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இலங்கை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

சுமார் 4560 தொன்கள் எடையுடைய “ஐஎன்எஸ் ராஜ்புட்” எனும் கப்பல் 146மீட்டார் நீளம் மற்றும் 15மீட்டார் அகலம் கொண்டதாகும்.

இலங்கையில் தரித்திருக்கும்வேளையில் இக்கப்பலிலுள்ள சிப்பந்திகள் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல உள்ளனர். அத்துடன், இக்கப்பல் ஒக்டோபர், 12 நாட்டைவிட்டு புறப்பட உள்ளது.