05 வது கடற்படை திறந்த படப்பிடிப்பு போட்டித்தொடர் – வெலிசரையில்
 

05 வது கடற்படை திறந்த படப்பிடிப்பு போட்டித்தொடர் கடந்த அக்டோபர் 05 திகதி முதல் 13 ஆம் திகதி வரை வெலிசரை கடற்படை படப்பிடிப்பு காம்ப்ளக்ஸில் நடைபெற்றது. அங்கு கடற்படை விழயாட்டு வீர, வீராங்கனிகள் தனது திறமைகளை வெளிப்படுத்தி போட்டித்தொடரில் வெற்றிபெற்றுள்ளனர்.

மேலும் இப் போட்டித்தொடரில் ஆன்பிரிவின் சிறந்த துப்பாக்கியாளராக கடற்படை வீர்ர் யமித் கிரிஷாந்த பெற்றுள்ளதுடன் 10 மீட்டர் பென் காற்று துப்பாக்கிகள் பிரிவின் 623.3 புல்லிகள் பெற்று புதிய இலங்கை சாதனையுடன் கடற்படை வீராங்கனி டெஹானி எகொடவெல போட்டித்தொடரில் சிறந்த துப்பாக்கியாளராக விருது பெற்றுள்ளார். இப் போட்டித்தொடருக்காக இலங்கை கடற்படை, இலங்கை இராணுவம், இலங்கை விமானப்படை, இலங்கை பொலிஸ் உட்பட விளையாட்டு சங்கங்கள் மற்றும் நாடு முழுவதும் பாடசாலைகளில் இருந்து 300 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.              

கடந்த அக்டோபர் 15ஆம் திகதி உஸ்வெடகெய்யாவ மாலிமா மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இப் போட்டித்தொடரில் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள், ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல அவர்கள் கழந்துகொன்டார். இன் நிகழ்வுக்காக கடற்படை படப்பிடிப்பு பிரிவின் தளபதி கொமடோர் பந்துல சேநாரத்ன, செயலாளர் லெப்டினன் கொமான்டர் சுஜீத் குமார ஆகியோரும் கலந்து கொண்டனர்.