கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீயணைப்புக்காக கடற்படை ஆதரவு
 

கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஜெயா கன்டெய்னர் டெர்மினலில் (JCT) அலுமினியம் பாஸ்பேட் (Aluminium Phosphide) வகையில் இரசாயனங்கள் நிறைந்த ஒரு கொள்கலன் வெடித்து ஏற்பட்ட ஏற்பட்ட தீயை நேற்று (அக்டோபர் 23) கடற்படையினரினால் முலுமையாக அணைக்கப்பட்டது. குறித்த தீ அனர்த்தம் பற்றி மேற்கு கடற்படை கட்டளைக்கு தெரிவித்த பின் இத்தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கை கடற்படை  தீயணைப்பு குழுவொன்று உடனடியாக புறப்பட்டுள்ளது.

இத்தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக சென்ற கடற்படை  தீயணைப்பு குழு மற்றும் கடற்படை இரசாயன உயிரியல் கதிரியக்க அணு பிரிவின் கடற்படையினர்கள் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கைகள் காரணமாக தீ மேலும் பரவாது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.