சுகயீனமுற்ற மீனவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார்
 

மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த வேளையில் ஏற்பட்ட கடுமையான நெஞ்சு வலி காரணமாக மீனவர் ஒருவர் கடற்படையினரால் கரைக்கு கொண்டுவரப்பட்டார். இம்மீனவர் கடந்த திங்கள் கிழமையன்று 'லக்சிறி 4' மீன்பிடி படகின் மூலம் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கந்தர மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

மீன்பிடி மற்றும் கடற்தொழில் திணைக்களத்தினால் இலங்கை கடற்படையினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக சுகயீனமுற்ற மீனவரை கரைக்கு கொண்டுவருவதற்காக இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகு குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டது. பின்னர் குறித்த மீனவர் இந்திய வணிகக் கப்பலில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கடற்படை கப்பலுக்கு மாற்றப்பட்டு திருகோணமலை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டார்.