டயலொக் சம்பியன்ஸ் லீக் ரக்பி போட்டித் தொடரில் முதல் போட்டியில் வெற்றி கடற்படைக்கு
 

டயலொக் சம்பியன்ஸ் லீக் ரக்பி போட்டித் தொடரின் கடற்படை அணி பங்குபெற்ற முதல் போட்டி கடந்த நவம்பர் 09 ஆம் திகதி கொழும்பு பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்றது. கடற்படை ரக்பி அணி மற்றும் பொலிஸ் ரக்பி அணி இடையில் இடம்பெற்ற இப் போட்டியில் 24 க்கு 23 ஆக கடற்படை அணி வெற்றி பெற்றது.

இப் போட்டி பார்வையிட இலங்கை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, கடற்படை பணிப்பாளர் நாயகம் பொருட்கள் மற்றும் சேவைகள் ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி, நிர்வாக பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் கஸ்ஸப போல் ஆகியோர் உட்பட சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள் கழந்துகொன்டனர்.