இஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமை பணியாளருடன் சந்திப்பு
 

இலங்கையின் மற்றும் இந்தியாவின் இஸ்ரேலிய தூதரகம் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் கர்னல்  எபி டெப்ரின் அவர்கள் நேற்று (நவம்பர் 28) கடற்படை தலைமை பணியாலர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்ளார். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட  விடயங்கள்  தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

மேலும் இன் நிகழ்வுக்காக பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் நிராஜ ஆட்டிகல அவர்கள் மற்றும் கடற்படை தலைமையகத்தில் பல மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.