வடக்கு கடற்படை வீரர்கள் இரத்த தானம்
 

68 வது கடற்படை தினத்தை முன்னிட்டு வட பிராந்திய கட்டளையகத்தில் கடைமையாற்றும் கடற்படை வீரர்கள், அண்மையில் (நவம்பர், 29) வட பிராந்திய கட்டளையக வைத்தியசாலையில் இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்துள்ளனர்.

வடக்கு கடற்படை கட்டளையாகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள், கப்பல்கள் மற்றும் படகுகளில் பணியாற்றும் கடற்படை வீரர்கள் சுமார் 140 பேர் தானாக முன்வந்து இரத்த தானம் செய்துள்ளது.

இந் நிகழ்வு, யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் இரத்த வங்கியின் வைத்திய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றுள்ளது. இப்பிராந்தியத்திலுள்ள நோயாளர்கள் பயன்பெறும் வகையில் இவ்வருடம் மூன்றாவது முறையாகவும் இவ் இரத்ததான நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.