புதிய கடற்படைத் தளபதி அதிமேதகு ஜனாதிபதியுடன் சந்திப்பு
 

இலங்கை கடற்படையின் 23 வது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்கள் இன்று (ஜனவரி 03) ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்திதித்துள்ளார்.

அங்கு அதிமேதகு ஜனாதிபதியவர்கள் முதலில் தனது வாழ்த்துக்களை கடற்படைத் தளபதிக்கு தெரிவித்துள்ளார். அதன் பின் இருவர்க்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெற்றன. அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியவர்களினால் ஜனாதிபதியவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.