புதிய கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
 

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி,04) சந்தித்தார். இச் சந்திப்பு வைஸ் அட்மிரல் சில்வா அவர்கள் கடற்படைத் தளபதியாக கடமையேற்ற பின் கெளரவ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் மேற்கொன்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பு ஆகும்

இச்சந்திப்பின் போது அவர்களிடையே சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. மேலும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் புதிய கடற்படைத் தளபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்துடன் இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டடன.