இலங்கையின் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
 

இலங்கையின் இந்திய உயர் ஆணையத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் கேப்டன் அஷோக் ராஓ அவர்கள் இன்று (ஜனவரி 04) கடற்படை தலைமையகத்தில் வைத்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை சந்திதித்தார்.

இச்சந்திப்பின் போது அவர்களிடையே சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. மேலும் கேப்டன் அஷோக் ராஓ அவர்கள் புதிய கடற்படைத் தளபதிக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். அத்துடன் இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டடன.