வெற்றிகரமான விஜயத்தின் பின் ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் நாட்டை விட்டு புறப்பட்டது
 

நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்டு கடந்த ஜனவரி 15 ஆம் திகதி ஹம்பாந்தொட்டை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள ஜப்பானிய சுய பாதுகாப்பு கடற்படை பிரிவின் “இகசுச்சி” எனும் கப்பல் இன்று (ஜனவரி 17) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது. நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது.

இக் கப்பல் இலங்கையில் இருந்த காலத்தில் கப்பலின் குழுவினர் இலங்கையில் முக்கியமான தளங்களுக்கு சென்றுள்ளனர். மேலும் ஹம்பாந்தொட்டை கடற்கரை சுத்தம்செய்யும் திட்டமொன்றுக்கும் இவர்கள் கழந்துகொன்டதுடன் நேற்று (ஜனவரி 16) ஹம்பாந்தொட்டை முதன்மை பாடசாலையின் மானவர்களுக்கு கப்பலின் கண்கானிப்பு விஜயமொன்றை மேற்கொள்ள சந்தர்பம் வழங்கப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த பல நிகழ்வுகளிலும் இவர்கள் கழந்துகொன்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.