சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கடற்படையினரினால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (ஜனவரி 20) திருகோணமலை பெக்பே பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 05 பேர் கைது செய்யப்பட்டது. அங்கு அவர்களிடமிருந்து ஒரு தடைசெய்யப்பட்ட வலை, ஒரு டிங்கி படகு மற்றும் பிடிக்கப்பட்ட 43 கிலோ கிராம் மீன்கள் கைது செய்யப்பட்டது.

அதன் படி கைது செய்த நபர்கள், தடைசெய்யப்பட்ட வலை, மீன்பிடி படகு, மீன்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.