சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற நபர்கள் கடற்படையினரினால் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையின் மரைன் படையணி வீர்ர்கள் மற்றும் திருகோணமலை பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று (ஜனவரி 24) திகதி கந்தலே தெஹிவத்த பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற 06 நபர்களை கைது செய்துள்ளனர்.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தளபதி அசேல இத்தவெல அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடி மகாவலி ஆற்றில் சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் ஊழல் கட்டுப்படுத்துவதுக்கு கடற்படை ஆதரவுடன் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதன் படி தற்போது கடற்படை தளபதியின் வழிகாட்டலின் கீழ் கடற்படை மரைன் படையணியின் கட்டளை அதிகாரி அவர்களினால் மேற்கொன்டுள்ள முதல் நடவடிக்கையில், இந்த சட்டவிரோத மணல் கடத்தல் செய்யும் நபர்களை கைது செய்யப்பட்டுள்ளது.

அங்கு 04 டிராக்டர்கள், 01 லொரி மற்றும் மணல் பொதி கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபர்கள், டிராக்டர்கள், லொரி மற்றும் மணல் பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 06 ஆம் திகதியும் மட்டக்களப்பு கலுதவேலி பகுதியில் சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற ஒருவரை கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.