சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கடற்படையினரினால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் நேற்று (ஜனவரி 24) பலைதீவுக்கு 01 கடல் மைல் தூரத்தில் உள்ள கிழக்கு கடல் பகுதியில் வைத்து தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டது. அங்கு அவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட வலைகள், ஒரு டிங்கி படகு மற்றும் பிடிக்கப்பட்ட 19 கடல் அட்டைகள் மற்றும் 25 கிலோ கிராம் மீன்கள் கைது செய்யப்பட்டது.

அதன் படி கைது செய்யப்பட்ட நபர்கள், சட்டவிரோத வலைகள், ஒரு மீன்பிடி படகு, கடல் அட்டைகள் மற்றும் மீன்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.