இலங்கை கடற்படையின் 234 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் வெளியேறல் அணிவகுப்பு
 

இலங்கை கடற்படையின் 234 ஆம் நிரந்தர ஆட்சேர்ப்பு பிரிவின் 329 வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து நேற்று ஜனவரி 26 ஆம் திகதி பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுனவில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி, ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

கெளரவ மகா மகாசங்கத்தினர், அனைத்து மதகுருமார்கள், தெற்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி, மற்றும் இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிருவனத்தில் கட்டளை அதிகாரி கொமடோர் ரன்ஜித் பிரேமரத்ன ஆகியோர் உட்பட, கடற்படை தலைமையகத்தின் மற்றும் தெற்கு கடற்படை கட்டளையின் மூத்த மற்றும் இளநிலை உத்தியோகத்தர்கள், முப்படையினர், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பயிற்சி முடித்து வெளியேரும் வீரர்களின் குடும்பத்தினரும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

மேலும் இப் பயிற்சியின் போது சிறந்து விளங்கிய வீரர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதள்கள் வழங்கப்பட்டன. அப்போது 234 வது ஆட்சேர்ப்பில் எல்.பி.ஐ சமிந்த சிறந்த பயிட்சியாளருக்கான விருதை மற்றும் சகல பாடங்களுக்களின் அதிக புள்ளிகளை பெற்றதற்கான விருதை பெற்றுள்ளார். பி.எச்.ஜி.சி.எஸ் லக்பிரிய சிறந்த துப்பக்கியாளருக்கான விருதை பெற்றதுடன் ஜி.எச்.எஸ்.யூ.த சில்வா சிறந்த விளையாட்டு போட்டியாளர்கலுக்கான விருதையும் வென்றார். மேலும் 234 வது ஆட்சேர்பின் சிறந்த பிரிவாக “சுரனிமில” பிரிவு விருது பெற்றுள்ளது.

மேலும் 234 வது ஆட்சேர்ப்பு பிரிவின் வீர்ர்களுடைய கவர்ச்சிகரமான நிகழ்வுகளில் மற்றும் கடற்படை கலாசார பிரிவினரால் சமர்பிக்கப்பட்ட கலாசார நிகழ்ச்சியின் பின் குறத்த வெளியேறல் அணிவகுப்பு நிரைவடைந்தது.