86.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரினால் கைது
 

கடற்படை புலனாய்வு தகவலின் படி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் உத்தியோகத்தர்கள் இன்று பருத்தித்துறை இம்பாசித்தி பகுதியில் வைத்து 86.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கேரள கஞ்சா பொதி பருத்தித்துறை, வியபரமுல்லை பகுதியில் உள்ள வீட்டொன்றில் கூறைக்குள் ஒழித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் 50 வயதானவராக அடயாலம் கானப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட குறித்த கேரள கஞ்சா பொதி மற்றம் சந்தேகநபர் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் பருத்தித்துறை பொலிஸார் மேற்கொள்ளப்படுகின்றது.

அதே போன்று கடந்த மூன்று வாரங்களில் மட்டும், கடற்படை மூலம் 509 கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சா கைது செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த நாட்டில் போதை பொருள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுக்கு கடற்படை நிலையான கவணத்தை செலுத்துகிறது.