கடலில் சுகயீனமுற்றிருந்த மலேசிய கடற்படை வீரர்கள் இருவர் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை ஆதரவு
 

மலேசிய உயர் ஸ்தானிகராலயம் மூலம் கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு (Maritime Rescue Coordinating Centre) விடுக்கப்பட்ட அறிவிப்பின் படி இலங்கை கடற்படையினரினால் இன்று (ஜனவரி 30) மலேசிய கடற்படையின் கஸ்துரி (KD Kasturi) கப்பலில் இருந்த இரண்டு (02) நோய்வாய்ப்பட்ட கடற்படை வீரர்கள் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன் படி தகவலை கிடைத்ததுடன் செயல்பட்ட இலங்கை கடற்படையினர் நோய்வாய்ப்பட்ட கடற்படை வீரர்களை கரைக்கு கொண்டு வர மேற்கு கடற்படை கட்டளையின் அதிவிரைவு தாக்குதல் படகொன்றை அனுப்பிவைத்தனர். கொழும்பு கலங்கரை விளக்கிலிருந்து 05 கடல் மைல் தொலைவில் தெக்கு கடல் பகுதியில் குறித்த நோய்வாய்ப்பட்ட கடற்படை வீரர்களை அதிவிரைவு தாக்குதல் படகுக்கு ஏற்றிக்கொன்டு கொழும்பு துறைமுகத்துக்கு கொன்டுவரப்பட்டதுடன் இவர்களை மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டது.