ஈரானிய கடற்படைக் கப்பல்கள் நாட்டை விட்டு புறப்பட்டது

கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்த 'புஷேர்' , லவான் பயன்டோர் எனும் ஈரானிய கடற்படைக்கப்பல்கள் இன்று பெப்ரவரி 18 ஆம் திகதி வெற்றிகரமான விஜயத்தின் பின் நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது.

இங்கு இலங்கை கடற்படையினறால் நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது. குறித்த கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இக் கப்பலின் கடற்படை சிப்பாய்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொன்டனர்.