இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் பதிமூன்று பேர் (13) கடற்படையினரினால் கைது

இலங்கை கடல் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் பதிமூன்று பேர் (13) நேற்று (பெப்ருவரி 20) வடக்கு கடற்படைக் கட்டளையின் விரைவு தாக்குதல் ரோந்து கப்பலின் மற்றும் விரைவு தாக்குதல் படகுகளின் இனைக்கப்பட்ட கடற்படையினர்களினால் கைது செய்யப்பட்டது.

அதன் படி காரைதீவுக்கு வடமேற்கு பகுதி கடலில் 01 டோலர் படகு மற்றும் அங்கு இருந்த ஐந்து மீனவர்கள், நெடுந்தீவுக்கு மேற்கு கடல் பகுதியில் இரண்டு (02) டோலர் படகுகள் அங்கு இருந்த எட்டு (8) மீனவர்கள் இவ்வாரு கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கப்பல் “எலார” நிருவனத்துக்கு கொன்டுவந்து மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இவ்வாரு சட்டவிரோதமாக கடல் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 31 மீவர்கள் மற்றும் 05 படகுகள் இந்த ஆண்டில் கடற்படை மூலம் கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும், இவ்வாரு எல்லை மீறி இலங்கை கடல் பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் கட்டுப்படுத்துவதுக்கும், உள்ளூர் மீனவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை கடற்படை மேலும் நடவடிக்கைகள் மேற்கொள்கின்றது.