“IRONMAN 70.3” சர்வதேச மும் முயற்சி போட்டிதொடரில் கடற்படை வெற்றியாலர்கள் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

“IRONMAN 70.3” சர்வதேச மும் முயற்சி போட்டிதொடர் கடந்த பெப்ருவரி 24 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்றன. இப் போட்டித்தொடருக்காக கடற்படையின் 12 வீர்ர்கள் பங்கு பெற்றுள்ளனர்.

அங்கு சிறப்பு திறன்களை காட்டிய கடற்படை வீர்ர்கள் நேற்று பெப்ருவரி 28 கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர். அங்கு அவர்கள் பெற்ற சாதனைகள் மற்றும் திறமைகளுக்கு கடற்படை தளபதி தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.