சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவர் (02) கடற்படையினரினால் கைது

தெக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் இன்று (மார்ச் 03) பிடிவெல்ல, பூஸ்ஸ கடல் பகுதியில் சட்டவிரோதமான மீன்பிடி உபகரணங்கள் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுப்பட்ட இருவரை (02) கைது செய்யப்பட்டனர். அங்கு அவர்களிடமிருந்து 02 ஈட்டி துப்பாக்கிகள் மற்றும் காயக் வகையில் 02 படகுகள் கடற்படையினரினால் கைப்பற்றப்பட்டது.

அதன் படி கைதுசெய்யப்பட்ட நபர்கள், பிடிக்கபட்ட மீன்கள், ஈட்டி துப்பாக்கிகள் மற்றும் படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காலி, மீன்வள மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.