‘தலேஷ்வரி’ கப்பலின் கட்டளை அதிகாரி மேற்கு கடற்படை கட்டளை தளபதியுடன் சந்திப்பு

கடந்த மார்ச் 03 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ள தலேஷ்வரி எனும் வங்காளம் கடற்படை கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் (ஆயுத) மொஹமட் மஹப்பத் அலி அவர்கள் நேற்று (மார்ச் 05) மேற்கு கடற்படை கட்டளை தளபதி நிஷாந்த உலுகேதென்ன அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்திதித்துள்னைர். இன் நிகழ்வுக்காக இலங்கையில் வங்காளம் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கமடோர் சய்ட் மக்சுமல் ஹகீம் அவர்களும் கழந்துகொன்டார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.