சட்டவிரோதமாக இரால்கள் பிடித்த 03 மீனவர்கள் கடற்படையினரினால் கைது

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நேற்று (மார்ச் 08) திருகோணமலை மலைமுந்தல் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதி பத்திரங்கள் இல்லாமல் இரால்கள் பிடித்த மூன்றுபேர் (03) கைது செய்ய்ப்பட்டது.

அங்கு அவர்களிடமிருந்து 3 ஜோடி நீர் முழ்கி துடுப்புகள், மூன்று முகமூடிகள் மற்றும் 31 இரால்கள் கைது செய்யப்பட்டது. மேலும் கடற்படையினரினால் கைது செய்யப்பட்ட இரால்களின் 25 இரால்கள் உயிருடன் இருந்த காரணத்தினால் மீண்டும் இரால்களை கடலுக்கு விடுவிக்கப்பட்டது.

குறித்த சந்தேகநபர்கள் மூத்துர் பகுதியில் வசிக்கும் 30, 39 மற்றும் 40 வயதாவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள், நீர்முழ்கி பொருட்கள் மற்றும் 06 இரால்கள் மேலதிக சட்ட நடவடிக்கை களுக்காக திருகோணமலை, மீன்வளத்துறை அதிகாரி அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.