கடற்படையினரின் உதவியுடன் வருடாந்த கச்சத்தீவு திருவிழா 2019

இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளும் இலங்கை கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா மிக சிறப்பாக 2019 மார்ச் 16 ஆம் திகதி நடத்த யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஏற்பாடு செய்துள்ளார். இம் முரையும் இந்த நடவடிக்கைகளுக்காக யாழ். மறை மாவட்ட குருமுதல்வருக்கு மற்றும் மாவட்ட செயலாளருக்கு தேவையான வசதிகல் வழங்குவதுக்காக கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.

அதன் படி வடக்கு கடற்படை கட்டளை மூலம் கச்சத்தீவு திருவிழாவின் கழந்து கொல்லும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதார வசதிகள், தற்காலிக படகுத்துறைகள் மற்றும் மின்சார வசதிகள் கடற்படை முலம் வழங்கப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்புக்காக மீட்புக் குழுக்களும் மருத்துவ வசதிகள் வழங்க ஒரு மருத்துவ அதிகாரி உட்பட குழு ஒன்றும் நடவடிக்கைகளிள் ஈடுபடுகின்றன. கடற்படை பங்களிப்புடன் கட்டப்பட்ட கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் சுற்றியுள்ள பகுதி மற்றும் தெருக்களை சுத்தம் செய்வதுக்காக பிரதேச செயலாளர் (நெடுந்தீவு) க்கு தேவையான ஆதரவு கடற்படையினரினால் வழங்கப்படுகின்றது.

வருடாந்தம் இடம்பெறுகின்ற குறித்த திருவிழாவுக்காக கடந்த ஆண்டில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து பக்தர்கள் 10.000 ம் பேர் பங்குபெற்றனர். இந்த ஆண்டிலும் பாரிய அலவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் படி கங்கசந்துரை மற்றும் குரிகட்டுவான் ஜெட்டியில் இருந்து கச்சத்தீவு வரை குருக்கள், அரசாங்க அதிகாரிகள், சிறப்பு நபர்கள், பக்தர்கள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் பூஜைக்கு தேவையான பல பொருட்கள், உபகரணங்கள் ஆகியவற்றைக் கொண்டு செல்ல ஒரு சிறப்புத் திட்டமொன்றை கடற்படை தயார் செய்துள்ளது.