கடலில் பாதிக்கப்பட்ட இரு மீனவர்களை கடற்படையினரினால் மீட்பு

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் இன்று (மார்ச் 14) மன்னார் மணல்பாரையிடையில் சிக்கிய மீன்பிடி படகொன்றில் இருந்த இரு மீனவர்களை காப்பாற்றப்பட்டது.

குறித்த மீன்பிடி படகு நேற்று (மார்ச் 13) மீன்பிடி நடவடிக்கைகாக மன்னார், பேசாலை பகுதிக்கு சென்றுள்ளதுடன் மணல்பாரை 4 மற்றும் 5 இடையில் உள்ள கடல் பகுதியில் பாதிக்கப்பட்டது. மன்னார் மணல்பாரை 4 பகுதியில் உள்ள கடற்படை ரேடார் மையம் மூலம் குறித்த மீனவர்களை கண்கானிக்கப்பட்டதுடன் அந்த மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகை உடனடியாக காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.