வெற்றிகரமான விஜயத்தின் பின் அவுஸ்ரேலிய கடற்படை கப்பல்கள் நாட்டை விட்டு புறப்பட்டன

அவுஸ்ரேலிய கடற்படையின் டயமன்டீனா மற்றும் லீவுன் போர் கப்பல்கள் இன்று (மார்ச் 20) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது. நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போது, மட்டக்களப்புக்கு அப்பால் உள்ள கடல் பகுதியில் மூழ்கிய கப்பல் தொடர்பான ஆரம்பகட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கடந்த 11 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த இக் கப்பல்கள் பிரகு கடந்த 17 ஆம் திகதி நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது.

இக் கப்பல் இலங்கையில் இருந்த காலத்தில் கப்பலின் குழுவினர் இலங்கை கடற்படையினர் ஏற்பாடு செய்த கிரிகேட், நீர்முழ்கி ஆகிய விளையாட்டு போட்டிகளிளும் கழந்துகொன்டனர்.