1547.68 கிலோ கிராம் புகையிலையுடன் மூவர் (03) கடற்படையினரினால் கைது

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர்களினால் இன்று (மார்ச் 22) காலையில் தலைமன்னார் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 41 புகையிலை பொதிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக மேற்கொன்டுள்ள சொதனை நடவடிக்கையின் போது 1547.68 கிலோ கிராம் புகையிலை கைது செய்யப்பட்டன. இதை டிங்கி படகொன்று மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டு வர முயற்சித்ததாக சந்தேகப்படுகின்றன. குறித்த சந்தேகநபர்கள் தலைமன்னார், ஊறுமலை பகுதியில் வசிக்கும் 28,30 மற்றும் 35 வயதாவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் புகையிலை பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், சுங்க அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டது.

மேலும் கடந்த தினங்களில் கடற்படையினரினால் தலைமன்னார் கடல் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 2787.3 கிலோகிராம் புகையிலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடற்படையினர் தொடர்ந்து சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்கிரது.