இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்துக்காக இலங்கைக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய குழுவினர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்துக்காக இலங்கைக்கு வந்துள்ள கென்பரா கப்பலின் கொடி அதிகாரி எயார் கொமடோர் ரிசட் ஒவன் மற்றும் நிவுகாசல் கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் அனீடா செலிக் ஆகியோர் இன்று (மார்ச் 24) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர்.

குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கையின் ஆஸ்திரேலிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கேப்டன் ஷோன் அன்வின் அவர்களும் கழந்துகொன்டுள்ளார்.

மேலும் நேற்று (மார்ச் 23) கென்பரா மற்றும் நிவுகாசல் கப்பல்களின் குழுவினர் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை சந்தித்தனர். சக்ஸஸ் மற்றும் பெரமடா கப்பல்களின் குழுவினர் கிழக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களை கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர். அங்கு இந்திய பசிபிக் ஒற்றுமை 2019 திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.