"மொன்ட்ரோஸ்" கப்பலின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (ஏப்ரல் 02) ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்த பிரித்தானிய கடற்படைக்குச் சொந்தமான "மொன்ட்ரோஸ்" எனும் கப்பலின் கட்டளை அதிகாரி கொமான்டர் கோனர் ஓனெல் இன்று (ஏப்ரல் 03) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கயின் பிரித்தானிய உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கர்னல் டேவிட் அஷ்மான் அவர்களும் கழந்துகொன்டுள்ளார்.