செல்லுபடியாகும் உரிமங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் (02) கடற்படையினரினால் கைது

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சல்லியம்பிட்டி கடல் பகுதியில் நேற்று (ஏப்ரல் 08) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது செல்லுபடியாகும் உரிமங்கள் இல்லாமல் மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு பேர் (02) கைது செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் 28 மற்றும் 43 வயதுடைய கல்பிட்டி பகுதியில் வசிக்கின்றவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர். அங்கு ஒரு டிங்கி படகு , ஒரு வெழி எரி இயந்திரம் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்களும் அவர்களின் உடமைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடற்றொழிலாளர் மீன்வளத் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.