இந்திய பாதுகாப்புத் துறையின் தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்புத் துறையின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் பொடாலி சங்கர் ராஜேஷ்வர் இன்று (ஏப்ரல் 08) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கயின் இந்திய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினென்ட் கர்னல் ரவி ஷேகர் மிஷ்ரா அவர்களும் கழந்துகொன்டார்.