சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட பத்து பேர் கடற்படையினரால் கைது

காரைதீவு, பெரியாச்சல் மற்றும் உச்சமுனை கடல் பகுதிகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ள பத்து (10) நபர்கள் நேற்று (ஏப்ரல் 10) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சிலர் மேற்கொணட ரோந்து நடவடிக்கையின் போது ஒரு சந்தேகத்திற்கிடமான விதத்தில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட , 4 டிங்கிப்படகள் மற்றும் 2 படகுகளுடன் 10 நபர்கள் பரிசோதிக்கப்பட்டதுடன் அவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டனர். மீன்பிடிக்க செல்லுபடியாகும் அனுமதி அட்டைகள் இவர்களிடம் காணப்படாததால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 20 முதல் 51 வயதுடைய நீர்கொழும்பு மற்றும் கல்பிட்டி பிரதேசத்தைவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள்,டிங்கிப்படகு,படகு, , ஓபிஎம் இயந்திரம் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்கள் மேற்னடி சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கடற்றொழில் ஆய்வாளர் அலுவலகத்திற்கு ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.