நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை கடற்படை கண்டுடபிடித்துள்ளது

அவிசாவெல்ல, கலனி கங்கையில் தீகல குளியல் நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை இன்று (ஏப்ரல் 13) இலங்கை கடற்படை மீட்டுள்ளது.

களனி ஆற்றில் மூழ்கிய பின்னர் காணாமல் போன சிறுவனை காணவில்லை என அவிசாவெல்ல பொலிஸிடமிருந்து கடற்படைத் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்தபோது, (ஏப்ரல் 12) மேற்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட 05 கடற்படை வீரர்களின் ஒரு டைவிங் குழு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு கடுமையான முயற்சியின் பின்னர் கடற்படையினர் நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை கண்டுபிடித்துள்ளனர்.

இறந்த சிறுவன் அவிசாவெல்ல தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் 17 வயது ஆண் ஆவதுடன் சிறுவனின் பூத உடல் மேலதிக நடவடிக்கைகளுக்கு அவிசாவெல்ல பொலிஸ் நிலையத்திற்கு கையழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.