பாக்கிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

இலங்கைக்கு ஆய்வுப் பயணமொன்று வந்துள்ள பாக்கிஸ்தான் தேசிய பாதுகாப்பு கல்லூரியின் எயார் கொமடோர் முஸ்தாபா அன்வர் அவர்கள் உட்பட குழுவினர் இன்று (ஏப்ரில் 18) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர். அங்கு அவருக்கு கடற்படை மரபுகளுக்கு அமைவாக கிழக்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்கப்பட்டன.

அதன் பின் வருகை தந்தவர்கள், கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களை சந்தித்து உரையாடினார்கள். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. மேலும் கிழக்கு கடற்படை தலைமையகத்தில் வைத்து வருகைதந்த குழுவினருடன் பாதுகாப்பு மற்றும் கல்வி பற்றி விவாதிக்கப்பட்டன.

அதன் பின் குழு பிரதிநிதிகள் கடல்சார் அகாடமில் உள்ள கடற்படை அருங்காட்சியகம் பார்வையிட சென்றுள்ளனர். இன் நிகழ்வுகளுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் பல அதிகாரிகளும் கழந்துகொன்டனர். மேலும் இக் குழுவினர் கடல்சார் அகாடமில் தளபதி கொமடோர் கலன ஜினதாச அவர்களை சந்தித்துள்ளனர். குறித்த இச்சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இன் நிகழ்வுகளுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கையின் பாக்கிஸ்தான் உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான கர்னல சஜாட் அலி உட்பட கடற்படை தலைமையகத்தில் பல மூத்த அதிகாரிகள் கழந்துகொன்டனர்.