பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்க கடற்படை நடவடிக்கைகள்

கடந்த ஏப்ரில் 21 ஆம் திகதி ஒரு முஸ்லீம் தீவிரவாதக் குழுவினால் மேற்கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு அனைத்து பாதுகாப்பு பிரிவுகளால் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் இந்த அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தேடி சிறப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களில் கடற்படைமேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படுகின்ற மூவர் கைது செய்யப்பட்டன.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் கடற்படை நாய் பிரிவு இனைந்து கடந்த ஏப்ரில் 27 ஆம் திகதி எரக்கண்டி நகரம் மற்றும் கடலோர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது வெடிபொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டன. எரக்கண்டி நகரத்தில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 16 வோட்டர்ஜெல் குச்சிகள், மின்சார அல்லாத 160 வெடித்தூண்டிகள், 12.5 அடி நீளமான 60 பாதுகாப்பு வெடி நூல்கள் மற்றும் ஒரு துவிச்சக்கர வண்டி கைது செய்யப்பட்டன. எரக்கண்டி கடலோர பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 48 வோட்டர்ஜெல் குச்சிகள், மின்சார அல்லாத 55 வெடித்தூண்டிகள், 14.5 அடி நீளமான 34 பாதுகாப்பு வெடி நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர், துவிச்சக்கர வண்டி மற்றும் வோட்டர்ஜெல் குச்சிகள் உட்பட வெடிபொருட்கள் மெலதிக சட்ட நடைவடிக்கைகளுக்காக குச்சவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த ஏப்ரில் 28 ஆம் திகதி ஜின்னபுரம் பகுதியில் மேற்கொன்டுள்ள ரோந்து நடைவடிக்கையின் போது ஒரு வோட்டர்ஜெல் டியுப், மின்சார அல்லாத 05 வெடித்தூண்டிகள், ஒரு பாதுகாப்பு வெடி நூல் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த வெடிபொருட்கள் மெலதிக சட்ட நடைவடிக்கைகளுக்காக புல்மூடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த ஏப்ரில் மாதம் 28 ஆம் திகதி பாணம, பொத்துவில் பகுதியில் ஹெடஒய பாலத்தின் அருகில் உள்ள உணவகமொன்றில் மேற்கொன்டுள்ள சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது மின்சார அல்லாத 05 வெடித்தூண்டிகள், 53 மீட்டர் நீளமான வெடி நூல் உடன் இருவர் (02) கடற்படையினரினால் கைது செய்து பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த (ஏப்ரில் 29) மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது வெலிசறை பகுதியில் உள்ள வீட்டொன்ரில் மற்றும் மாபொல பகுதியில் உள்ள வீட்டொன்றில் உள்ள ஆடை தொழிற்சாலைகளிலிருந்து இராணுவ வண சீருடைகளுக்கு சமமான முழுமையாக முடிந்த 140 ஆடைகள் மற்றும் அரை முடிந்த 14 ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த ஆடைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வத்தலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற நபர்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தேடல் செயல்பாடுகள் அனைத்து கட்டளைகளும் உள்ளடக்கி கடற்படையினரினால் மேலும் மேற்கொள்ளப்படுகின்றன