கடற்படையினரினால் சட்டவிரோத மீன்பிடி வலைகள் கண்டுபிடிக்கப்பட்டன

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் நேற்று (மே 04) புல்மூடை, அரிசிமலை கடற்கரை பகுதியில் வைத்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயண்படுத்தப்படுகின்ற சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் பிரகாரமாக நேற்று மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற சில பொருட்கள் அரிசிமலை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கு 02 தடைசெய்யப்பட்ட வலைகள், ஒரு டிங்கி படகு, ஒரு ஜோடி மீன்பிடி துடுப்புகள் மற்றும் 02 கத்திகள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குச்சவேலி, மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.