திருகோணமலை, டச் பே கடற்கரையில் வைத்து சந்தேகத்திற்குரிய 02 மீன்பிடி படகுகள் கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன.

திருகோணமலை, டச் பே கடற்கரையில் வைத்து சந்தேகத்திற்குரிய 02 மீன்பிடி படகுகள் நேற்று (மே 12) கடற்படையினரினால் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் திருகோணமலை, டச் பே கடற்கரையில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது ஒரே பதிவு எண் கொண்ட இரு படகுகள் கண்கானிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த படகுகள் கைது செய்யப்பட்டன. அங்கு ஒரு வெழி எரி இயந்திரம் மற்றும் மீன்பிடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கண்டுபிடிக்கப்பட்ட 02 டிங்கி படகுகள், வெழி எரி இயந்திரம் மற்றும் மீன்பிடி பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டன.