வெற்றிகரமான பயிற்சி விஜயத்தின் பின் இலங்கை கடற்படை கப்பல் ‘சமுதுர’ இலங்கை வருகை

சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியின் (International Maritime Defence Exhibition – IMDEX) பங்கேற்க கடந்த மே மாதம் 06 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திலிருந்து சென்ற இலங்கை கடற்படை கப்பல் ‘சமுதுர’ வெற்றிகரமான பயிற்சி விஜயத்தின் பின் இன்று (மே 06) வந்தடைந்தது. வருகைதந்த கப்பலை கடற்படை மரபுக்களுக்கமைய படி வரவேற்கப்பட்டன.

இன் நிகழ்வுக்காக கொடி அதிகாரி கொடி கட்டளை ரியர் அட்மிரல் ஆனந்த குறுகே மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் உபுல் த சில்வா கழந்துகொன்டனர். அங்கு கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் டேமியன் பிரனாந்து அவர்களினால் மூத்த அதிகாரிகளுக்கு பயிற்சி விஜயத்தை பற்றி கருத்துக்கள் கூறப்பட்டன.

மேலும் 2019 மே மாதம் 15 ஆம் திகதி சிங்கப்பூர் கடற்படைத் தளபதி, ரியர் அட்மிரல் லூ சூன் ஹாங் இலங்கை கடற்படை கப்பல் ‘சமுதுர’ கப்பலுக்கு கண்கானிப்பு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். அங்கு அவர் இலங்கை கடற்படை பிரதிநிதித்துவப்படுத்தி குறித்த கண்காட்சியின் கழந்துகொண்ட ரியர் அட்மிரல் கபில சமரவீர மற்றும் கட்டளை அதிகாரி கேப்டன் டேமியன் பிரனாந்து ஆகியோரை சந்தித்தார். அதன் பின் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.


சிங்கப்பூர் கடற்படைத் தளபதி இலங்கை கடற்படை கப்பல் ‘சமுதுர’ வுக்கு மேற்கொன்டுள்ள விஜயம்


இலங்கை கடற்படை கப்பல் ‘சமுதுர’ திருகோணமலை துறைமுகத்திக்கு வருகை