அனுமதிப் பத்திரம் இல்லாமல் சங்கு பரிமாற்றியதற்காக கடற்படையினரால் ஒருவர் கைது

மன்னார் பொலீஸுடன் இணைந்து கடற்படை வீரர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது சரியான அனுமதி பத்திரம் இல்லாமல், சங்கு பரிமாற்றத்திற்காக நபரொருவர் இன்று (23மே) கைதுசெய்யப்பட்டார்.

அதன்படி, கடற்படை மற்றும் பொலீஸ் அதிகாரிகள் மன்னார் உள்ள தாராபுரம் சந்தியில் இருக்கும் சாலை தடையில் இருந்த வண்டியை சோதனை செய்த போது சரியான அனுமதி பத்திரம் இல்லாமல், வாகனத்தில் 2,500 சங்கு கடத்திய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பேசாலை இருந்து மன்னாருக்கு சங்குகளை கொண்டு செல்லும் போதே கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாயின. சந்தேக நபர் பேசாலையைச் சேர்ந்த வயது 50ச் சேர்ந்தவராகும்.

சங்குகள் மற்றும் வண்டி கைது செய்யப்பட்ட நபர் மேற்படி விசாரணைக்காக மன்னார் மீன்பிடித்துறை அலுவளகரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

a