சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கடற்படையினர் நேற்று (ஜூன் 01) பூனாவை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத 200 சிகரெட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் பிரகாரமாக இலங்கை கடற்படை கப்பல் பண்டுகாபய முகாமின் முனடனில் உள்ள கடையொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் சட்டவிரோத சிகரெட்டுகள் விற்பனை செய்யும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டன.

குறித்த சந்தேகநபர் பூனாவை பகுதியில் வசிக்கும் 43 வயதாவராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் கைப்பற்றப்பட்ட குறித்த நபர் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் மேலதிக விசாரணைக்காக மெதவச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.