மன்னார் பிரதேசத்தில் தாவுழ்பாடு கடற்கரையில் 33 பீடி இலை பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன

வட மத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட கடற்டையினரால், ஜூன் மாதம் 4 ஆம் திகதி மன்னாரில் உள்ள தாவுழ்பாடு கடற்கரையில் பீடி இலைகளின் 33 பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரமாக வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது மன்னாரில் உள்ள தாவுழ்பாடு கடற்கரையில் 526 கிலோ கிராம் நிறையுடைய புகையிலை பொதிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 56 மற்றும் 27 வயதிற்கு உட்பட்ட தோட்டவேலி மற்றும் எருகுலம்பிடி பகுதிகளில் வசிக்கின்றவர்கள் என அடையாலம் காணப்பட்டுள்ளது.

கடற்படையினரால் மீட்கப்பட்ட பீடி இலை பொதிகள் மற்றும் இரண்டு சந்தேக நபர்கள் மேலமிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்திலுள்ள சுங்க அலுவலகத்திற்க்கு கையளிக்கப்பட்டன.