பி 626 கப்பல் இலங்கை கடற்படை கப்பல் “கஜபாஹு” எனப் பெயரில் அதிகாரம் அளிப்பு

இலங்கை கடற்படையின் செயற்பாட்டு நடவடிக்கைகளை விரிவாக்கும் நோக்கத்தில் அமெரிக்காவில் இருந்து இலங்கை கடற்படைக்கு பெறப்பட்டுள்ள பி 626 கப்பல் உத்தியோகபூர்வமாக இலங்கை கடற்படை கப்பல் “கஜபாஹு” என்ற பெயரில் அதிகாரமளிப்பு விழா இன்று (ஜூன் 06) அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவருடைய தலமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்காக மதிப்பிற்குரிய துறவிகள் உட்பட மத குருக்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரால் (ஓய்வு) சரத் கோட்டேகொட உட்பட அமைச்சு செயலாளர்கள், இலங்கையில் அமெரிக்க தூதர் திருமதி எலீனா டெப்லிஸ், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவ தளபதி, லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் முப்படை மற்றும் காவல் துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பல அதிதிகளும் இன் நிகழ்வுக்காக கலந்து கொண்டனர்.

மேலும், கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள், ரியர் அட்மிரல் நிராஜ ஆடிகல, இலங்கை கடலோர காவல் படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க ஆகியோர் உட்பட பலரும் இன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கழந்துகொன்ட அதிமேதகு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களினால் புதிய கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் ரோஹித அபேசிங்கயிடம் கப்பலுக்கான அதிகார பத்திரம் வழங்கப்பட்டது. அவ்வேளை கப்பலின் கட்டளை அதிகாரி குறித்த பத்திரத்தை வாசித்தவுடன் பெயர்பலகை திரைநீக்கம் இடம்பெற்றது. அதன் பின் ஜனாதிபதி மற்றும் அதிதிகள் இக் கப்பலை சுற்றிப்பார்வையிட்டனர்.

அமெரிக்க கடலோர காவல்படைக்கு சொந்தமான இக் கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஹவாய் தீவு ஹொனோலுலுயில் வைத்து அதிகாரப்பூர்வமாக இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 115 மீட்டர் நீளம் மற்றும் 13 மீட்டர் அகலம் கொன்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 28 கடல்மைல் அதிகபட்சவேகத்துடன் சுமார் 3302 தொன் கொள்திறன் கொண்ட இக் கப்பலில் 22 கடற்படை அதிகாரிகள் மற்றும் 111 கடற்படை சிப்பாய்கள் ஒரேநேரத்தில் தங்குவதற்கான விசாலமான விடுதி மற்றும் பிற வசதிகளையும் கொண்டு காணப்படுகின்றது.

குறித்த கப்பல் புதிய தொழில் நுட்ப ஆயுதங்கள், தொடர்பு சாதனங்கள் மற்றும் பல இயக்க முறைமைகள் கொன்ட கப்பலாகும். இது இலங்கை கடற்படை கப்பல்களுடன் சேற்ந்த்தன் பின் இலங்கை கடற்படையில் பயன்படுத்தப்படுகின்ற மிகப் பெரிய கப்பலாக அமைகின்றது. இலங்கை கடல் எல்லைக் குழ் ரோந்து பணிகள், தேடுதல் நடவடிக்கைகள், மனிதாபிமான நிவாரண மற்றும் பேரழிவு பதில் நடவடிக்கைகள் மற்றும் கடல் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றக நடவடிக்கைகளுக்காக இக்க்கப்பல் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.