287.3 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் (02) கடற்படையினரால் கைது

கடற்படையினரால் இன்று (ஜூன் 07) சிலாவதுர, ஹுனெஸ்நகர் கடற்கரை பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 287.3 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் (02) கைது செய்யப்பட்டனர்.

அதன் பிரகாரமாக வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் சிலாவதுர, ஹுனெஸ்நகர் கடற்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது 287.3 கிலோ கிராம் பீடி இலைகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பீடி இலைகள் லொரி வன்டி மூலம் கொண்டு செல்ல தயாராக்கும் போது இவ்வாரு கைது செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் சிலாவதுர, வெப்பம்குழம் பகுதியில் வசிக்கின்ற 17 மற்றும் 46 வயதானவர்களாக கண்டரியப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள பீடி இலைகள், சந்தேகநபர்கள் மற்றும் லொரி வன்டி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பானம் சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன.

மேலும், 2019 ஜூன் மாதம் 05 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்டையினரால், பலைத்தீவு கடற்கரை பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது 60.7 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளது.