மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்கள் கடமையேற்பு

மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்கள் 2019 ஜூன் 12 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.

அதன் பிரகாரமாக குறித்த கட்டளையின் முன்னாள் தளபதியான ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் வைத்து ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்கவுக்கு கடற்படை பாரம்பரியமாக கடமைகள் ஒப்படைத்துள்ளார். ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க மேற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமை ஏற்க முன் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக பணியாற்றினார்.

அங்கு புதிய தளபதி அவர்ளை கடற்படை மரபுகளுக்கமைய மேற்கு கடற்படை கட்டளைக்கு வரவேற்றுள்ளனர். குறித்த கட்டளையில் கடமையாற்றிய ரியர் அட்மிரல் உலுகேதென்ன அவர்கள் தற்போது கடற்படை தலைமை பணியாளராக கடமையாற்றிகிரார். கடற்படை அதிகாரிகள் குறித்த சிரேஷ்ட அதிகாரிக்கு தன்னுடைய வாழ்த்துக்கள் தெரிவித்த பின் சம்பிரதாய மரியாதை செலுத்தினர்.