கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (JCET) திருகோணமலையில் தொடங்கியது

இலங்கை கடற்படை மற்றும் அமெரிக்க கடற்படை இணைந்து மேற்கொள்ளும் கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (Joint Combined Exchange Training) 2019 ஜூன் 13 திருகோணமலை கடற்படை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் தொடங்கியது.

இப் பயிற்சியின் தொடக்க விழாவின் பிரதம அதிதியாக சிறப்பு படகு படை தலைமையகத்தின் கட்டளை அதிகாரி கொமான்டர் துசித தமிந்த கழந்துகொன்டுள்ளதுடன் 4 வது விரைவு தாக்குதல் படகுகள் குழுவின் அதிகாரிகள் மற்றும் அமெரிக்க கடற்படையின் 19 வது சிறப்பு படைத் பிரிவின் வீரர்களும் இன் நிகழ்வில் கழந்துகொன்டனர்.

இந்த பயிற்சி திட்டத்திற்காக 4 வது விரைவு தாக்குதல் படகுகள் குழுவின் 12 பேர் மற்றும் சிறப்பு படகு படையின் 24 பேர் உட்பட 32 பேர் கழந்துகொள்வார்கள். அமெரிக்க கடற்படையின் 19 வது சிறப்பு படைத் பிரிவின் 10 வீர்ர்களினால் குறித்த பயிற்சி பாடத்திட்டம் நடத்தப்படுகிறது.

இந்த பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றதுடன் இப் பயிற்சி மூலம் கடற்படையினர்களுக்கு பயிற்சி மற்றும் ஆதரவு தேவைகள் பற்றி நல்லிணக்கம், புரிதல் மற்றும் ஒப்பந்தம் பெற முடிகின்றது. கடற்படை சிறப்பு படகு படைத் தலைமையகத்தில் 03 வார காலப்பகுதி நடைபெறுகின்ற இப் பயிற்சிக்காக கடற்படை சிறப்பு படகு படை, 4 வது விரைவு தாக்குதல் படகுகள் குழு மற்றும் அமெரிக்க கடற்படை சிறப்பு படைத் பிரிவின் வீர்ர்கள் பங்கேற்க உள்ளனர். இப் பயிற்சி மூலம் தொழில் திறன் மேம்பாடு இலங்கை கடற்படையினர் மற்றும் அமெரிக்க கடற்படையினர் இடையில் அறிவு பகிர்வு முக்கிய குறிக்கோளாக அடையாளம் காணலாம். இப் பயிற்சி ஜூலை 05 அன்று முடிவடைய திட்டமிடப்பட்டுள்ளது.