வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி வட மாகாண ஆளுநருடன் சந்திப்பு

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவிர இன்று (ஜூன் 14) வட மாகாண ஆளுநர் சுரேஷ் ராகவன் அவர்களை ஆளுநர் அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இவர் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக பதவி ஏற்றபின் ஆளுநர் சந்தித்த முதல் தடவை இதுவாகும். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.