போதை மாத்திரங்களுடன் இருவர் கைது

கடற்படையினர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு இனைந்து 2019 ஜூன் 14 திருகோணமலை லிங்கநகர் பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது போதை மாத்திரங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன் பிரகாரமாக கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இனைந்து லிங்கநகர் பகுதியில் மேற்கொன்டுள்ள சுற்றி வலைப்பின் போது ப்ரிகெசிம் (Pregazim) 130 போதை மாத்திரங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த போதை மாத்திரங்கள் சட்டவிரோதமாக விநியோகிக்க ஒரு மோட்டார் சைக்கிளை மூலம் கொண்டு செல்லும் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் 26 மற்றும் 30 வயதிற்குட்பட்ட திருகோணமலை பிரதேசத்தில் வசிப்பவர்களாக அடையாலம் காணப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் மற்றும் போதை மாத்திரங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.