நீரில் மூழ்கிய சிறுமியின் சடலம் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது

கண்தேகெட்டியாவில் உள்ள லோக்கல் ஓயா நீர்த்தேக்கத்தில் மூழ்கிய சிறுமியின் சடலத்தை கடற்படை சுழியோடிகளால் இன்று காலை (ஜூன் 16) மீட்கப்பட்டுள்ளது.

கடற்படை தலைமையகத்திற்கு கண்தேகெட்டியா காவல்துறை வழங்கிய தகவலுக்கிளங்க தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை சுழியோடிகள் குழுவொன்று உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து, பல மணிநேர தேடலுக்குப் பிறகு நீரில் மூழ்கியிருந்த சிறுமியின் சடலத்தை மீட்டுள்ளது.

மேலும், இறந்த சிறுமி பதுல்லையில் உள்ள மெதபதன பகுதியைச் சேர்ந்த 15 வயது உடையவராக அடையாளம் காணப்பட்டுள்துடன், இந்தச் சடலம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காண்டதேகெட்டியா பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.